நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 27, 2012

மனுஷன் கதவை அடைத்தால் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே , ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எமது  அன்பின் வாழ்த்துக்கள் .



அநேகம் பேர் தங்களது வாழ்வின் அனுபவங்களை சொல்லும் பொழுது இப்படி சொல்லுவார்கள்  , " எனது வாழ்வில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது . பிசாசின் பொல்லாத சூழ்சிகள் ஒருபுறம் , மனிதர்கள் வேண்டும் என்றே செய்யும் காரியங்கள் இன்னொரு புறம் .  இப்படி எனது நன்மைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது ".

ஆம் பிரியமானவர்களே , மனிதன் ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று கொள்ள கூடாத படிக்கு அநேகம் தடை கற்களை உங்களுக்கு முன்பாக வைத்திருக்க கூடும் .  உங்கள் சொத்தின் மேலோ , உங்கள் வேலையின் உயர்வின் மேலோ , உங்கள் குடும்பதி வளர்ச்சிக்கு முட்டுக்கடையாகவோ மனிதன் உங்கள் ஆசீர்வாத கதவை அடைத்து  வைத்திருக்கலாம் .


ஆனால் நமது தேவன் சர்வ வல்லமையுடையவர் சொல்லுகிற வார்த்தைகளை கேளுங்கள் , " உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் , உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தை கைக்கொண்ட படியால் இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் .  அதை ஒருவனும் பூட்ட மாட்டான் ..."   வெளி : 3 : 8 


ஆம் .   பிரியமானவர்களே ...உங்கள் நம்பிக்கை கெட்டு போகாது . இயேசுவை நோக்கி பார்த்த ஒருவர் முகமும் வெட்கப்பட்டு போகாது .  ஒரு புதிய திறந்த வாசலை கர்த்தர் உங்களுக்கு முன்பாக வைக்கிறார் .  விசுவாசத்துடன் இந்த பாடலையும் கேளுங்கள் .....



நீங்கள் பெற்று கொண்ட அற்புதத்தை எங்களுக்கு எழுதுங்கள் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .... ஆமென்

சனி, பிப்ரவரி 11, 2012

நிறைவேற்றுகிற தேவன் - செய்தியின் காணொளி



கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே .... 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் ....

என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை , எப்பொழுது தான் எனக்கு ஒரு வழி திறக்கும் என்று நினைக்கிறீர்களா ...? விசுவாசத்துடன் இந்த செய்தியை கேளுங்கள் ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ....



உங்கள் ஜெப தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அஞ்சிடேன் ....... இனி நான் அஞ்சிடேன் .....

அச்சம் என்ற உணர்வு மனிதன் வாழ்வில் பல தருணங்களில் அவனை நிம்மதியாக வாழ விடாமல் செய்து விடுகிறது .  எதிர்கால வாழ்வை குறித்த பயம்  , நோயை குறித்த பயம் , சாபத்தை குறித்த பயம் , பிசாசின் கிரியை குறித்த பயம் ..... இப்படி பல பயங்கள்.....

ஆனால் பரிசுத்த வேதம் சொல்லுகிறது ..... நீங்கள் பயப்படாதிருங்கள் ....! நான் உங்களுடன் கூட இருக்கிறேன் .... ஆம் ...பிரியமானவர்களே .... கர்த்தராகிய இயேசுவை நீங்கள் சார்ந்து கொள்ளும் போது , அவர் உங்களிடமாய் கடந்து வரும் பொழுது நீங்கள் ஏன் பயப்படவேண்டும் ....?

இந்த பாடலை விசுவாசத்துடன் கேளுங்கள் .... கர்த்தர் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்வார் ......




உங்களின் கருத்துகள்  , ஜெபதேவைகள் எதுவானாலும் எங்களுக்கு எழுதலாம் .... உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ..... ஆமென் 


திங்கள், ஜனவரி 16, 2012

ஏன் நீ கலங்கவேண்டும் ...?


சில மாதங்களுக்கு முன்பு எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது மனித வாழ்வில் நிகழும் எதிர்பாராத சில காரியங்களையும் அதனால் மனிதனுக்கு ஏற்படுகிற துயரமான சில தருணங்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டது .  சில வேளைகளில் ஏன் மனிதன் கலங்கி போகிறான் என்று ஒரு கேள்வி கேட்டால் ,  சிலர் சொல்லுகிறார்கள் , " எதிர்பாராத இழப்பினால் கலங்கி போய் விட்டோம் " என்றும் , சிலர் சொல்லுகிறார்கள் , " எனக்கு என்று இந்த உலகில் யாரும் இல்லை என்பதை நினைக்கும் போது என்னால் எப்படி கலங்காமல் இருக்க முடியும் ?" என்று . 




 பரிசுத்த வேதத்தில் சங்கீதம் 42 : 5  மற்றும் 12  வசனங்களை வாசிக்கும் போது , வேதம் சொல்லுகிறது , " என ஆத்துமாவே , நீ ஏன் கலங்குகிறாய் ? ஏன் எனக்குள் தியங்குகிறாய் ? தேவனை நோக்கி காத்திரு "


எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் கவனித்து பாருங்கள் .  உங்களை நேசிக்கும் , உங்களுக்காக பரிதபிக்கும் , உங்களுக்காகவே இந்த உலகத்தில் வந்த ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது , நீங்கள் கலங்கவேண்டிய அவசியம் என்ன ?


எபிரெயர் 2 : 18  சொல்லுகிறது , " அவர்தாமே சோதிக்கப்ப்பட்டு பாடுபட்டதினாலே , அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார் "  ஆம் .. பிரியமானவர்களே .., உங்கள் சோதனையில் உங்களுக்கு உதவி செய்வதற்காக சிலுவை பாடுகளை ஏற்றுகொண்ட ஒரு அன்பின் தெய்வம் உங்களுக்கு இருக்கிறார் .


I பேதுரு 5 : 7  சொல்லுகிறது , " அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் "  உங்களை கனிவுடன் விசாரித்து , உங்கள் கண்ணீருக்கு பதில் கொடுக்கும் ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது நீங்கள் கலங்கவேண்டிய காரணம் என்ன ..?


பிரியமானவர்களே , கவலைப்படாதிருங்கள் ... நீங்கள் சில காரியங்களை இழந்து போய் இருக்கலாம் , சில காரியங்கள் உங்களுக்கு எதிராய் இருக்கலாம் . சில மனிதர்கள் உங்களுக்கு விரோதமாக பேசி கொண்டே இருக்கலாம் . கடுமையான போராட்டங்கள் உங்கள் வாழ்வின் நிம்மதியை அழித்து உங்களை கலங்க செய்யலாம் .  கல்வாரி சிலுவை பரியந்தம் உங்களுக்காக பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி உங்களுக்காக ஜீவனை தந்த அன்பின் தேவன் இயேசு உங்களுக்காக இருக்கிறார் .  அவரை நோக்கி பாருங்கள் .  உங்கள் கலக்கத்திற்கு பதிலாக உங்களை களிப்பினால் நிரப்புவார் .


 ஒரு சிறிய ஜெபத்தை நாம் செய்வோமா ...?

அன்பின் பரலோக தகப்பனே , நீர் எங்களுக்காக இந்த உலகில் வந்து எங்களுக்காக மரித்து , மறுபடியும் உயிர்த்து பரலோகத்தில் எங்களுக்காக பரிந்து பேசுகிறீர் என்பதை நாங்கள் விசுவாசிக்க்றோம் .  இப்பொழுதும் எங்களின் இந்த கலக்கமான சூழ்நிலையில் எங்கள் உள்ளத்தில் நீர் கடந்து வரும் படி உம்மை நாங்கள் அழைக்கிறோம் .  இயேசு கிறிஸ்துவே , உலகம் தரமுடியாத உமது சமாதானத்தை நீர் எங்களுக்கு தாரும் . உமது ரத்தத்தினால் எங்களை கழுவும் .  நீர் உமது சந்தோசத்தை எங்களுக்கு தருவதினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே .... ஆமென் .


பிரியமானவர்களே ... கலங்காதிருங்கள் ... கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார் .  ஆமென் .