புதன், நவம்பர் 23, 2016

ஆசாரியன் ஜீவிக்கவேண்டிய மாதிரி

ஆசாரியன் எப்படிபட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை கடந்த இடுகைகளில் நாம் பார்த்தோம். இந்த பதிவில் ஆசாரியனின் ஜீவிதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக...!

1. தலைப்பாகை ஆசாரியனை விட்டு நீங்ககூடாது :- லேவி 1௦ : 6
     ஆசாரியனின் வஸ்திரங்களில் ஓன்று தலைப்பாகை. தலைப்பாகை வைத்திருக்கும் ஆசாரியன் மகிமையை அல்லது கனத்தை கிரீடமாக வைத்து இருக்கிறான் என்று அர்த்தம், அந்த தலைப்பாகையை எடுத்தால் , கனவீனம் உண்டாகிவிடும். எனவே , ஆசாரியன் தனது கனத்தை காத்து கொள்ளவேண்டியது அவசியம்.  கனம் என்றவுடன் படிப்போ அல்லது பட்டங்களோ என்று நாம் நினைக்ககூடாது. இரட்சிப்பு தான் அந்த தலைசீரா என்று புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம். எபே 6: 17 , 1 தெச 5 : 8. ஆசாரியன் தான் பெற்று கொண்ட இரட்சிப்பை காத்து கொள்ளவேண்டும்...


2. வஸ்திரங்கள் கிழிக்கப்பட கூடாது :- லேவி 1௦ : 6
     பழைய ஏற்பாட்டு காலங்களை நாம் பார்க்கும் போது , துக்கம் ஏற்ப்படுகிற வேளைகளில் தங்கள் வஸ்திரங்களை கிழித்து கொள்ளுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆசாரியனுடைய வஸ்திரங்களை பரிசுத்த வஸ்திரங்கள் என்று வேதம் சொல்லுகிறது ( யாத் 28 : 2-4 ).  இந்த ஆசாரியனின் வஸ்திரங்கள் மேல் ரத்தம் தெளிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டது ( லேவி 8 : 30 ) பரிசுத்தமாக்கப்பட்டது. வெளி 7 : 14 ல் சொல்லப்பட்ட படி ஆட்டுக்குட்டியின் ( இயேசுவின் ) ரத்தத்தினால் தான் இந்த வஸ்திரம் பரிசுத்தமாக்கப்பட்டது. எனவே எக்காலத்திலும் , ஆசாரியன் இந்த பரிசுத்தத்தை இழந்து போக கூடாது....




3. ஆசாரியன் கூடாரத்தை விட்டு புறப்பட்டு போகக் கூடாது :- லேவி 1௦:7
     ஆசாரியனுக்கு வேலை தேவனுடைய கூடாரத்தில் தான் என்பதை மறந்து போக கூடாது....எந்த நேரம் மக்கள் பலி செலுத்த வந்தாலும், அந்த ஊழியத்தை நிறைவேற்ற ஆசாரியன் கூடாரத்தில் இருக்கவேண்டும். கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் ( எரேமி 48 : 10 ) . எனவே , ஆசாரியன் தேவனுடைய வீட்டை அல்லது சபையை குறித்த உத்திரவாதம் உள்ளவனாக இருக்கவேண்டும்...


4 . கர்த்தர் சொன்னவைகளை போதிக்கிறவனாய் இருக்கவேண்டும் :- லேவி 1௦ : 1௦ - 11
     ஆசாரியன் கடமைக்காய் பிரசங்கம் பண்ணுகிறவனாய் அல்லது தனது சொந்த புத்தியில் இருந்து எடுத்து பேசுகிறவனாய் இருக்கக்கூடாது. பரிசுத்தம் உள்ளதற்கும் , பரிசுத்தம் இல்லாததற்கும் , தீட்டுள்ளதற்க்கும் , தீட்டில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும்படி கர்த்தர் சொன்ன பிரமாணங்களை போதிக்கிறவனாய் இருக்கவேண்டும்....


தொடரும்......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக