திங்கள், ஜனவரி 16, 2012

ஏன் நீ கலங்கவேண்டும் ...?


சில மாதங்களுக்கு முன்பு எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது மனித வாழ்வில் நிகழும் எதிர்பாராத சில காரியங்களையும் அதனால் மனிதனுக்கு ஏற்படுகிற துயரமான சில தருணங்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டது .  சில வேளைகளில் ஏன் மனிதன் கலங்கி போகிறான் என்று ஒரு கேள்வி கேட்டால் ,  சிலர் சொல்லுகிறார்கள் , " எதிர்பாராத இழப்பினால் கலங்கி போய் விட்டோம் " என்றும் , சிலர் சொல்லுகிறார்கள் , " எனக்கு என்று இந்த உலகில் யாரும் இல்லை என்பதை நினைக்கும் போது என்னால் எப்படி கலங்காமல் இருக்க முடியும் ?" என்று . 




 பரிசுத்த வேதத்தில் சங்கீதம் 42 : 5  மற்றும் 12  வசனங்களை வாசிக்கும் போது , வேதம் சொல்லுகிறது , " என ஆத்துமாவே , நீ ஏன் கலங்குகிறாய் ? ஏன் எனக்குள் தியங்குகிறாய் ? தேவனை நோக்கி காத்திரு "


எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் கவனித்து பாருங்கள் .  உங்களை நேசிக்கும் , உங்களுக்காக பரிதபிக்கும் , உங்களுக்காகவே இந்த உலகத்தில் வந்த ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது , நீங்கள் கலங்கவேண்டிய அவசியம் என்ன ?


எபிரெயர் 2 : 18  சொல்லுகிறது , " அவர்தாமே சோதிக்கப்ப்பட்டு பாடுபட்டதினாலே , அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார் "  ஆம் .. பிரியமானவர்களே .., உங்கள் சோதனையில் உங்களுக்கு உதவி செய்வதற்காக சிலுவை பாடுகளை ஏற்றுகொண்ட ஒரு அன்பின் தெய்வம் உங்களுக்கு இருக்கிறார் .


I பேதுரு 5 : 7  சொல்லுகிறது , " அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் "  உங்களை கனிவுடன் விசாரித்து , உங்கள் கண்ணீருக்கு பதில் கொடுக்கும் ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது நீங்கள் கலங்கவேண்டிய காரணம் என்ன ..?


பிரியமானவர்களே , கவலைப்படாதிருங்கள் ... நீங்கள் சில காரியங்களை இழந்து போய் இருக்கலாம் , சில காரியங்கள் உங்களுக்கு எதிராய் இருக்கலாம் . சில மனிதர்கள் உங்களுக்கு விரோதமாக பேசி கொண்டே இருக்கலாம் . கடுமையான போராட்டங்கள் உங்கள் வாழ்வின் நிம்மதியை அழித்து உங்களை கலங்க செய்யலாம் .  கல்வாரி சிலுவை பரியந்தம் உங்களுக்காக பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி உங்களுக்காக ஜீவனை தந்த அன்பின் தேவன் இயேசு உங்களுக்காக இருக்கிறார் .  அவரை நோக்கி பாருங்கள் .  உங்கள் கலக்கத்திற்கு பதிலாக உங்களை களிப்பினால் நிரப்புவார் .


 ஒரு சிறிய ஜெபத்தை நாம் செய்வோமா ...?

அன்பின் பரலோக தகப்பனே , நீர் எங்களுக்காக இந்த உலகில் வந்து எங்களுக்காக மரித்து , மறுபடியும் உயிர்த்து பரலோகத்தில் எங்களுக்காக பரிந்து பேசுகிறீர் என்பதை நாங்கள் விசுவாசிக்க்றோம் .  இப்பொழுதும் எங்களின் இந்த கலக்கமான சூழ்நிலையில் எங்கள் உள்ளத்தில் நீர் கடந்து வரும் படி உம்மை நாங்கள் அழைக்கிறோம் .  இயேசு கிறிஸ்துவே , உலகம் தரமுடியாத உமது சமாதானத்தை நீர் எங்களுக்கு தாரும் . உமது ரத்தத்தினால் எங்களை கழுவும் .  நீர் உமது சந்தோசத்தை எங்களுக்கு தருவதினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே .... ஆமென் .


பிரியமானவர்களே ... கலங்காதிருங்கள் ... கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார் .  ஆமென் .

புதன், ஜனவரி 11, 2012

ஆசீர்வாதமாய் இருக்க வேண்டுமா ....?

உலகம் முழுவதும் உள்ள ஜனங்கள் ஆசீர்வாதமாய் வாழவேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள் .  தவறில்லை . ஆசீர்வாதமாய் வாழவேண்டும் என்பதற்காக சிலர் புண்ணிய யாத்திரைகள் , சிலர் நேர்ச்சைகள் , சிலர் மந்திரங்கள் என்று பல வழிகளை முயற்சிக்கிறார்கள் .  ஆனால் உண்மையான ஆசீர்வாதத்தை நாம் பெற்று கொள்ள வேண்டுமானால் சில வழிமுறைகள் உள்ளது .


பரிசுத்த வேதம் சொல்லுகிறது , " முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் . அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் "  - மத்தேயு 6 : 33

உலகத்தின் பெரும் ஜனக்கூட்டம் பெரும் செல்வதை தேடி தான் ஓடி கொண்டு இருக்கிறது .  ஆனால் பெரும்பாலும் அவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் தான் . காரணம் என்னவெனில் அவர்களின் தேடுதல் , ஓட்டம் எல்லாம் ஆசீர்வாதங்களை நோக்கி தானே தவிர , ஆசீர்வாதங்களை கொடுக்க வல்லமை உள்ள தேவனை நோக்கி அல்ல ....

 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் அப்படிஎன்றால் என்ன அர்த்தம் .   வேதம் சொல்லுகிறது , " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது ".  அப்படி என்றால் என்ன அர்த்தம் ...?  பாவத்திற்கு செத்து , நீதிக்கு என்று பிழைக்கிற அனுபவம் . பாவத்திற்கு எப்படி சாக முடியும் ...? பாவத்தை மன்னிக்க வல்லமை உள்ள இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் போதிக்கிறது .  அப்படி என்றால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது சொந்த ரட்சகராக மாற வேண்டும் .  அவர் ஒருவரே நமது இதயத்தின் ஏக்கம் , நோக்கம் எல்லாம் ஆக இருக்க வேண்டும் .


அந்த இயேசு நமது உள்ளத்தில் வரும் போது , என்ன நடக்கும் தெரியுமா ..? . 
வேதம் சொல்லுகிறது , " அவர் நமது குறைவுகளை எல்லாம் நிறைவாய் மாற்றுவார் ". 
சங்கீதம் 128  சொல்லுகிறது , " கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ , அவன் பாக்கியவான் .  உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் .  உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாயிருக்கும் ."

பிரியமானவர்களே ... உங்கள் வாழ்கையில் நமக்காக இந்த உலகத்தில் வந்த தேவனுக்கு முதல் இடம் கொடுங்கள் . அவர் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார் . உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாய் மாற்றி , நீங்கள் வாழும் இந்த பூமியில்  , உங்கள் சத்துருக்களுக்கு மத்தியில் ஒரு பந்தியை உங்களுக்கு ஆயத்தம் பண்ணி , உங்களை அபிஷேகித்து , உங்கள் வாழ்கையை நிரம்பி வழிய செய்து  , நன்மையால் உங்களை திருப்தி ஆக்குவார்.  பெரிய காரியங்களை எதிர்பாருங்கள் .  ஏசுவுக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணிப்போம் . ஆமென்

ஞாயிறு, ஜனவரி 08, 2012

தைரியமாயிருங்கள் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதர  , சகோதரிகளுக்கு  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .....

இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் , ஏதோ ஒரு நிலையில்  , எதையோ நினைத்து பயந்து போய் இருக்கிறார்கள் .  சிலர் வியாதியை நினைத்து ...... சிலர் எதிர் காலத்தை நினைத்து ...... சிலர் கடும் கடன் பிரச்சினையை நினைத்து .......இன்னும் சிலர் தொடரும் போராட்டங்களை நினைத்து ...... பயம் ... பயம் ......


 உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை இன்று ஆண்டவர் தருகிறார் ...."தைரியமாயிருங்கள்".   ஆமென்

 பிரியமானவர்களே எப்படி நம்மால் தைரியம் அடையமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம் .  சில வழிகளை பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது .

இயேசுவின் ரத்தத்தினால்  :   ஆம் பிரியமானவர்களே ,  எபிரேயர் 10  : 20  சொல்லுகிறது ,  " ....... அவருடைய  ( இயேசுவின் ) இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாகிறது" .    வானத்தையும் , பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமை உள்ள தேவன் இந்த உலகில் மனிதனாக பிறந்து உனக்காகவும் எனக்காகவும் கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினார் .   அந்த ரத்தத்தை குறித்து எபிரேயர் 12  : 24   சொல்லுகிறது...." நன்மையானவைகளை பேசுகிற இரத்தம் .... " என்று .   ஆம் .. பிரியமானவர்களே , இந்த உலகத்தில் உனக்காக யாரும் பரிந்து பேச இல்லாத காரணத்தினால் ஒரு வேளை நீ சோர்ந்து போய் இருக்கலாம் .  கர்த்தர் சொல்லுகிறார் , "  உனக்காக பரிந்து பேசுவதற்காகவே என் இரத்தத்தை நான் சிந்தியுள்ளேன் ....தைரியமாயிருங்கள்".    ஆமென் .


வாக்குதததினால்  :   ஆம் பிரியமானவர்களே ,  எபிரேயர் 13 : 5 , 6   சொல்லுகிறது, " .... நான் உன்னை விட்டு விலகுவதில்லை  , உன்னை கைவிடுவதில்லை என்று சொல்லி இருக்கிறாரே . அதினால் நாம் தைரியம் கொண்டு : கர்த்தர் எனக்கு சகாயர் , நான் பயப்படேன் , மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே ".    எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் பாருங்கள் .  மனிதனின் வாரத்தைகள் ஒருவேளை மாறி போய்விடலாம் . ஆனால் வாக்கு மாறாத தேவனின் வாரத்தைகளை குறித்து பரிசுத்த வேதம் சொல்லுகிறது , " வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் என் வாரத்தைகள் மாறாது " என்று .  இன்னும் ஒரு பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது , " தேவன் பொய் சொல்ல மனுஷன் அல்ல , மனம் மாற மனுபுத்திரனும் அல்ல , அவர் சொல்லியும் செயாதிருப்பாரோ ? ".   என் கலங்குகிறீர்கள் .  அவர் உங்களுக்கு சொன்ன வார்த்தை மாறாதது .  தைரியமாயிருங்கள்.  அவரின் வார்த்தையை பிடித்து கொள்ளுங்கள் .  பயம் உங்களை விட்டு ஓடி போகும் .


ஒரு சிறிய ஜெபத்தை விசுவாசத்தோடு செய்வோமா ...!
அன்புள்ள ஏசுவே , எங்கள் பரம தகப்பனே  , நீர்  தேவன் என்றும் , நீர் எனக்காக இந்த உலகத்தில் பிறந்து எனக்காக இரத்தம் சிந்தி மரித்து , மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தவர் என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  உம்முடைய இரத்தம் எனக்காக பரிந்து பேசுகிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  உம்முடைய வாக்குகள் மாறாதது என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  ஏசுவே ... என் உள்ளத்தில் நீர் வந்து வாசம் பண்ணும் .  என் காரியங்களை எல்லாம் பொறுப்பெடுத்து கொள்ளும் .  விசுவாசத்தினால் உண்டாகும் தைரியத்தினால் என்னை நிரப்பும் .  உம்முடைய நாமத்தை என் வாழ்வில் மகிமை படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ..... ஆமென் ..


பிரியமானவர்களே ....தைரியமாயிருங்கள். உங்கள் காரியம் ஜெயமாய் மாறும் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ...