திங்கள், பிப்ரவரி 27, 2012

மனுஷன் கதவை அடைத்தால் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே , ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எமது  அன்பின் வாழ்த்துக்கள் .



அநேகம் பேர் தங்களது வாழ்வின் அனுபவங்களை சொல்லும் பொழுது இப்படி சொல்லுவார்கள்  , " எனது வாழ்வில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது . பிசாசின் பொல்லாத சூழ்சிகள் ஒருபுறம் , மனிதர்கள் வேண்டும் என்றே செய்யும் காரியங்கள் இன்னொரு புறம் .  இப்படி எனது நன்மைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது ".

ஆம் பிரியமானவர்களே , மனிதன் ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று கொள்ள கூடாத படிக்கு அநேகம் தடை கற்களை உங்களுக்கு முன்பாக வைத்திருக்க கூடும் .  உங்கள் சொத்தின் மேலோ , உங்கள் வேலையின் உயர்வின் மேலோ , உங்கள் குடும்பதி வளர்ச்சிக்கு முட்டுக்கடையாகவோ மனிதன் உங்கள் ஆசீர்வாத கதவை அடைத்து  வைத்திருக்கலாம் .


ஆனால் நமது தேவன் சர்வ வல்லமையுடையவர் சொல்லுகிற வார்த்தைகளை கேளுங்கள் , " உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் , உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தை கைக்கொண்ட படியால் இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் .  அதை ஒருவனும் பூட்ட மாட்டான் ..."   வெளி : 3 : 8 


ஆம் .   பிரியமானவர்களே ...உங்கள் நம்பிக்கை கெட்டு போகாது . இயேசுவை நோக்கி பார்த்த ஒருவர் முகமும் வெட்கப்பட்டு போகாது .  ஒரு புதிய திறந்த வாசலை கர்த்தர் உங்களுக்கு முன்பாக வைக்கிறார் .  விசுவாசத்துடன் இந்த பாடலையும் கேளுங்கள் .....



நீங்கள் பெற்று கொண்ட அற்புதத்தை எங்களுக்கு எழுதுங்கள் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .... ஆமென்

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ஆசரிப்பு கூடாரம் - வேத பாடம் - பகுதி 3 - கர்த்தர் லேவியரை தெரிந்தெடுத்தல்


பிரியமானவர்களே .....ஆசரிப்பு கூடாரத்தை குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம் .  முதல் பகுதியில் ஆசரிப்பு கூடாரம் எப்படி வந்தது என்பதையும் , இரண்டாம் பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் அமைப்பு குறித்தும் நாம் பார்த்தோம் .  இந்த பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் ஊழியத்திற்காக ஊழியரை ஆண்டவர் நியமம் செய்தது குறித்து தியானிப்போம் .

தேவ ஜனம் எகிப்தில் பார்வோனிடம் அடிமைகளாக இருந்தார்கள் .  தேவ ஆராதனை இல்லை  தேவனை ஆராதிக்க பார்வோனிடம் இருந்து ஜனத்தை விடுதலை செய்ய மோசேயை அனுப்பினார்  ( யாத்தி 3 : 12 , 5 : 1 ). பார்வோன் அவர்களை விடவில்லை . கர்த்தர் எகிப்தில் வாதைகளை அனுப்பினார் . பார்வோனின் இருதயம் கடினப்பட்டது . ஒன்பது வாதைகளை அனுப்பியும் பார்வோன் ஜனத்திற்கு விடுதலை கொடுக்கவில்லை .  பத்தாவதாக ராஜாவின் அரண்மனை முதல் ஏழைகளின் குடிசை வரையிலும் மிருக ஜீவன்களிலும் , மனிதரிலும் உள்ள முதற் பேறு அனைத்தையும் அழித்தார்.  இஸ்ரவேலரோ கர்த்தரின் கட்டளைப்படி பஸ்கா ஆடு அடித்து ரத்தத்தை வீட்டின் நிலைக்கால்களில் பூசி இருந்தபடியால் காக்கப்பட்டார்கள் . எகிப்திலே  உண்டான வாதையில் இஸ்ரவேலரின் முதற்பேறு காக்கப்பட்ட படியால் , இஸ்ரவேலரின் முதற் பேறு அனைத்தும் எனக்குரியது என கர்த்தர் கட்டளை இட்டு இருந்தார் .  ( யாத் 13 : 1 , 2 ) .  இவ்விதம் முதற் பேறு அனைத்தும் கர்த்தருடையதே....!


 இவ்வாறு எகிப்தில் இருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் இஸ்ரவேலர் சீனாய் மலை அருகில் வந்தார்கள் .  கர்த்தர் தமது ஜனம் தம்மை சேவிக்க வேண்டிய விதம் , கைக்கொள்ளவேண்டிய கற்பனை முதலியவற்றை கொடுக்க , மோசேயை மலை உச்சிக்கு அழைத்தார் . மோசே பிரமாணத்தை வாங்கும் படியாக மலைக்கு சென்றார் . மோசே திரும்பி வர 40 நாட்கள் ஆகி விட்டது .  ஜனங்களோ  ஆரோனிடம் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள் . " எகிப்து தேசத்தில் இருந்து நம்மை அழைத்து வந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ ? அறியோம் .  ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன் நடக்கும் தெய்வங்களை உண்டுபண்ணவேண்டும் " என்று வேண்டினார்கள் .  உடனே ஆரோன் , " உங்கள் காதணிகளை கொண்டு வாருங்கள் ' என்று கட்டளையிட்டான் . அவர்கள் காதணிகளை கொடுத்தார்கள் . அதினால் ஒரு கன்று குட்டி தெய்வத்தை உண்டுபண்ணி கொடுத்தான் . அவர்கள் அதை ஆராதித்தார்கள் .

அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ இறங்கி போ ! எகிப்து தேசத்தில் இருந்து நீ அழைத்து கொண்டு வந்த உன் ஜனங்கள் தங்களை கெடுத்து கொண்டார்கள் என்றார் . மோசே வந்து பார்க்கும் போது ஜனங்கள் கன்று குட்டி தெய்வத்தை வணங்கி நடனம் பண்ணுவதை கண்டான் .  மோசே கோபம் மூண்டவனாய் கன்று குட்டி தெய்வத்தை அக்கினியால் சுட்டு அரைத்து ஜனங்களை குடிக்க செய்தான் ( யாத் 32 : 20 )



பின்னர் மோசே  சகல ஜனங்களையும் பார்த்து கர்த்தருடைய பட்சத்தில் நிற்ப்பவன் யார் ? அவர்கள் என்னண்டை வரக்கடவர்கள் என்றான்  ( யாத் 32 ; 26 ). உடனே லேவி கோத்திரத்தார் மோசேயிடம் சென்றார்கள் . அப்பொழுது மோசே கர்த்தரின் கட்டளைப்படி அவனவன் தன் தன் சகோதரனையும் தன் தன் அயலானையும் கொன்று போடகடவன் என்றான்  ( யாத் 32 ; 27 ) .  உடனே லேவியர் பட்டயத்தை உருவி அன்றைய தினம் 3000 பேரை கொன்றார்கள் .



இவ்விதம் தேவ கட்டளைப்படி லேவியர் , சகோதரர் என்று பாராமல் பட்டயத்தை உருவி வெட்டினபடியால் லேவியரை தமக்கென்றும் , தம்முடைய ஊழியத்திற்கு என்றும் கர்த்தர் பிரித்து எடுத்து கொண்டார் ( உபா 33 : 8 , 10 )



ஆகவே இக்காரணத்தால் , எகிப்தில் இருந்து புறப்பட்ட வேளை சகல இஸ்ரவேலிலும் முதற்பேறு தமக்குரியது என்று சொல்லியதை நினைத்து அதற்க்கு பதிலாக லேவியரை முதற்பேறாக நியமித்து கொண்டார் ( எண் 3 : 12 , 13 ; எண் 8 : 18 )  இவ்விதமாய் லேவியர் தேவனுடைய ஊழியத்திற்கு என்று வேறு பிரிக்கப்பட்டார்கள் .



லேவியின் வரலாறு :  இவர் யாக்கோபின் மூன்றாவது குமாரன்  ( ஆதி 35 : 23 ) . யாக்கோபு பதான் அராமில் தனது மாமனாரின் வீட்டில் 20 வருடம் தங்கினார் . பின்னர் யாக்கோபு தகப்பன் வீட்டிற்கு சென்றார் . போகிற வழியில் சாலேம் என்னும் சீகேம் பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டார் ( ஆதி 33 : 18 ).  அங்கிருக்கும் போது யாக்கோபின் மகள் தீனாள் தேசத்து பெண்களை பார்க்க போனாள்.  அப்பொழுது சீகேம் தீனாளை கண்டு இச்சித்து தீட்டுப்படுத்தினான் . இதினால் யாக்கோபின் பிள்ளைகளுக்கு கோபம் உண்டாயிற்று .  எனவே யாக்கோபின் பிள்ளைகளான சிமியோனும் , லேவியும் தங்கள் பட்டயத்தை உருவி அவ்வூர் வாலிபர் அனைவரையும் கொன்று போட்டார்கள் .  ( ஆதி 34 : 25 ) . இந்த காரணத்தால் யாக்கோபு தனது கடைசி காலத்தில் சிமியோனையும் , லேவியையும் சபித்தார் .  ( ஆதி 49 : 5 , 7 ) .  இவாறு லேவி சபிக்கப்பட்டவன் ..



ஆனால் சாபதிற்க்குள்ளான லேவி சந்ததியார் ,  கர்த்தருக்காக கர்த்தருடைய பட்சத்தில் வைராக்கியமாய் நின்றதால் சாபத்தை போக்கி ஆசிர்வாதத்தை பகிர்ந்து கொள்ள , கர்த்தர் அவனை கனமான ஊழியத்திற்கு பாத்திரமாக்கினார் .   

 நீங்கள் யாருடைய பக்கம் .....?



-------------------தொடரும்  ------------------. அடுத்த பதிவில் " எப்படிபட்டவன் ஊழியதிர்க்குரியவன் .?" என்பதை நாம் பார்க்கலாம் .  கர்த்தரின் கிருபை நம்மோடு இருப்பதாக ......ஆமென் 

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

ஆசரிப்பு கூடாரம் - வேத பாடம்


தேவனால் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமும் , ஏவாளும் தேவ கட்டளையை மீறின படியால்  , ஏதேன் தோட்டத்திற்கு புறம்பே தள்ளப்பட்டனர் . அதன் பின்னர் ஆதாமுக்கு காயீன் , ஆபேல் என்னும் இரு குமாரர் பிறந்தார்கள் . இவர்கள் வளர்ந்து வரவே தேவனுக்கு காணிக்கை செலுத்த சென்றனர் ( ஆதி 3 , 4 அதி ). வேத புத்தகத்தில் முதலாவது தேவனுக்கு காணிக்கை செலுத்தினதாக காண்பது இதுவே .  காணிக்கை செலுத்துவது என்பது தேவனை ஆராதிப்பதே ..  காயீனின் காணிக்கையை தேவன் ஏற்று கொள்ளாததால் காயீன் எரிச்சல் கொண்டு சகோதரன் ஆபேலை கொன்றான் . ஆபேல் மரிக்கவும் ஆதாமுக்கு ஆபேலுக்கு பதிலாக சேத் பிறந்தான் . சேத்துக்கு ஏனோஸ் பிறந்தார் . சேத் பிறக்கவும் ஆராதனை திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது .
 
 

ஆதாம் உண்டாக்கப்பட்டு 1500 வருடம் ஆகும் போது , பூமியில் ஜனம் திரளாய் பெருகி இருந்தனர் .  ஆனால் உண்மையான ஆராதனையோ இல்லாமல் போயிற்று .  அக்காலத்தில் நோவாவின் வீட்டார் மாத்திரம் உண்மையாய் கர்த்தரை சேவித்து வந்தனர் .  ஆதலால் கர்த்தர் நோவாவின் குடும்பத்தை காப்பாற்றி ஜனத்தை அளிக்க சித்தம் கொண்டார் .  அப்படியே கிமு 1656 ம வருடம் ஜலப்பிரளயம் வந்து ஜனசமுதாயம் அழிக்கப்பட்டது.
 
 

ஜலப்பிரளயதிர்க்கு பின்னர் நோவா தேவனுக்கு பலியிட்டு தேவனை ஆராதித்தார் ( ஆதி 8 ; 20 ) . இந்த ஆராதனையும் பின்னர் இல்லாமற் போயிற்று . ஜலப்பிரளயதிர்க்கு பின்னர் 367 ம வருடம் வரவே தேவ ஆராதனை முற்றிலும் அற்று போய் விக்கிரக ஆராதனை உண்டாயிற்று . அப்படி விக்கிரகங்களை ஆராதித்த ஆபிரகாமை கர்த்தர் அழைத்தார்  ( யோசுவா 24 : 2  ).  ஆபிரகாம் கர்த்தரின் அழைப்பிற்கு இசைந்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தார் .  ஆபிரகாம் கூடாரவாசியாய் இருந்தும் போன போன இடங்களில் எல்லாம் கர்த்தரை ஆராதித்தார் . (  ஆதி 13 ; 4 , 18   ;  ஆதி 15 : 9 - 12 ).  ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு பலிபீடங்களை கட்டி கர்த்தரை ஆராதித்தார் ( ஆதி 26 : 25 ).  பின்னர் ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபும் ஆராதனை நடத்தினார் ( ஆதி 35 : 7 , 8  )
 
 

கர்த்தர் ஆபிரகாமிடத்தில் உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் பரதேசிகளாய் இருந்து 400 வருடம் உபத்திரப்படுவார்கள் .  நாலாம் தலைமுறையில் விடுதலை அடைந்து வாக்குதத்தம்  பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்கு திரும்ப வருவார்கள் என்றும் சொன்னார் ( ஆதி 15 : 13 - 16 ). இந்த தீர்க்க தரிசனத்தின் படி யாக்கோபின் 130 வது வயதில் ஆபிரகாமின் சந்ததி எகிப்துக்கு போனார்கள் ( ஆதி 47  : 9  ).  நான்காம் தலைமுறை வரும் பொழுது கர்த்தர் அவர்களை விடுவிக்க சித்தம் கொண்டார் .  நான்கு தலைமுறைகலாவன :-  எகிப்துக்கு போனவர்களில் ஒருவன் லேவி .  அவன் மகன் கோகாத் .  அவர் மகன் அம்ராம் .  அவர் மகன் மோசே .  மோசே நான்காம் தலைமுறை காரன் . அவரே இஸ்ரவேலை கானானுக்கு வழிநடத்தினவர்  ( I நாளா 6 ; 1 - 3 )
 
 

இந்த அடிமைத்தன காலத்தில் தேவ ஆராதனை முற்றிலுமாய் நின்று போய் இருந்தது .  ஆதலால் திரும்பவும் இஸ்ரவேல் கர்த்தரை சேவிப்பதற்காக கானானுக்கு கர்த்தர் வழிநடத்தினார் .  எகிப்து தேசத்தில் இருந்து சீனாய் மலை அருகில் வரவும்  , கர்த்தர் சீனாய் மலைக்கு மோசேயை அழைத்தார் . அம்மலையில் வைத்து கர்த்தரை ஆராதிக்க வேண்டிய மாதிரி , கைக்கொள்ள வேண்டிய கட்டளை யாவையும் கர்த்தர் மோசேக்கு கற்ப்பித்து கொடுத்தார் .  இவ்விதமாய் தம்மை ஆராதிப்பதற்க்காக மோசேக்கு கர்த்தர் காட்டி கொடுத்த கூடாரம் தான் ஆசரிப்பு கூடாரம் ...


------- தொடரும் --------------
 

சனி, பிப்ரவரி 11, 2012

நிறைவேற்றுகிற தேவன் - செய்தியின் காணொளி



கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே .... 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் ....

என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை , எப்பொழுது தான் எனக்கு ஒரு வழி திறக்கும் என்று நினைக்கிறீர்களா ...? விசுவாசத்துடன் இந்த செய்தியை கேளுங்கள் ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ....



உங்கள் ஜெப தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அஞ்சிடேன் ....... இனி நான் அஞ்சிடேன் .....

அச்சம் என்ற உணர்வு மனிதன் வாழ்வில் பல தருணங்களில் அவனை நிம்மதியாக வாழ விடாமல் செய்து விடுகிறது .  எதிர்கால வாழ்வை குறித்த பயம்  , நோயை குறித்த பயம் , சாபத்தை குறித்த பயம் , பிசாசின் கிரியை குறித்த பயம் ..... இப்படி பல பயங்கள்.....

ஆனால் பரிசுத்த வேதம் சொல்லுகிறது ..... நீங்கள் பயப்படாதிருங்கள் ....! நான் உங்களுடன் கூட இருக்கிறேன் .... ஆம் ...பிரியமானவர்களே .... கர்த்தராகிய இயேசுவை நீங்கள் சார்ந்து கொள்ளும் போது , அவர் உங்களிடமாய் கடந்து வரும் பொழுது நீங்கள் ஏன் பயப்படவேண்டும் ....?

இந்த பாடலை விசுவாசத்துடன் கேளுங்கள் .... கர்த்தர் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்வார் ......




உங்களின் கருத்துகள்  , ஜெபதேவைகள் எதுவானாலும் எங்களுக்கு எழுதலாம் .... உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ..... ஆமென்