திங்கள், பிப்ரவரி 27, 2012

மனுஷன் கதவை அடைத்தால் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே , ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எமது  அன்பின் வாழ்த்துக்கள் .



அநேகம் பேர் தங்களது வாழ்வின் அனுபவங்களை சொல்லும் பொழுது இப்படி சொல்லுவார்கள்  , " எனது வாழ்வில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது . பிசாசின் பொல்லாத சூழ்சிகள் ஒருபுறம் , மனிதர்கள் வேண்டும் என்றே செய்யும் காரியங்கள் இன்னொரு புறம் .  இப்படி எனது நன்மைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது ".

ஆம் பிரியமானவர்களே , மனிதன் ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று கொள்ள கூடாத படிக்கு அநேகம் தடை கற்களை உங்களுக்கு முன்பாக வைத்திருக்க கூடும் .  உங்கள் சொத்தின் மேலோ , உங்கள் வேலையின் உயர்வின் மேலோ , உங்கள் குடும்பதி வளர்ச்சிக்கு முட்டுக்கடையாகவோ மனிதன் உங்கள் ஆசீர்வாத கதவை அடைத்து  வைத்திருக்கலாம் .


ஆனால் நமது தேவன் சர்வ வல்லமையுடையவர் சொல்லுகிற வார்த்தைகளை கேளுங்கள் , " உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் , உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தை கைக்கொண்ட படியால் இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் .  அதை ஒருவனும் பூட்ட மாட்டான் ..."   வெளி : 3 : 8 


ஆம் .   பிரியமானவர்களே ...உங்கள் நம்பிக்கை கெட்டு போகாது . இயேசுவை நோக்கி பார்த்த ஒருவர் முகமும் வெட்கப்பட்டு போகாது .  ஒரு புதிய திறந்த வாசலை கர்த்தர் உங்களுக்கு முன்பாக வைக்கிறார் .  விசுவாசத்துடன் இந்த பாடலையும் கேளுங்கள் .....



நீங்கள் பெற்று கொண்ட அற்புதத்தை எங்களுக்கு எழுதுங்கள் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .... ஆமென்

2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ .... வர்ருங்கள் ..... உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ...

      ஆண்டவர் இயேசுவின் நாம் மகிமைப்படுவதாக .... ஆமென்

      நீக்கு