ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

ஆசரிப்பு கூடாரம் - வேத பாடம்


தேவனால் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமும் , ஏவாளும் தேவ கட்டளையை மீறின படியால்  , ஏதேன் தோட்டத்திற்கு புறம்பே தள்ளப்பட்டனர் . அதன் பின்னர் ஆதாமுக்கு காயீன் , ஆபேல் என்னும் இரு குமாரர் பிறந்தார்கள் . இவர்கள் வளர்ந்து வரவே தேவனுக்கு காணிக்கை செலுத்த சென்றனர் ( ஆதி 3 , 4 அதி ). வேத புத்தகத்தில் முதலாவது தேவனுக்கு காணிக்கை செலுத்தினதாக காண்பது இதுவே .  காணிக்கை செலுத்துவது என்பது தேவனை ஆராதிப்பதே ..  காயீனின் காணிக்கையை தேவன் ஏற்று கொள்ளாததால் காயீன் எரிச்சல் கொண்டு சகோதரன் ஆபேலை கொன்றான் . ஆபேல் மரிக்கவும் ஆதாமுக்கு ஆபேலுக்கு பதிலாக சேத் பிறந்தான் . சேத்துக்கு ஏனோஸ் பிறந்தார் . சேத் பிறக்கவும் ஆராதனை திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது .
 
 

ஆதாம் உண்டாக்கப்பட்டு 1500 வருடம் ஆகும் போது , பூமியில் ஜனம் திரளாய் பெருகி இருந்தனர் .  ஆனால் உண்மையான ஆராதனையோ இல்லாமல் போயிற்று .  அக்காலத்தில் நோவாவின் வீட்டார் மாத்திரம் உண்மையாய் கர்த்தரை சேவித்து வந்தனர் .  ஆதலால் கர்த்தர் நோவாவின் குடும்பத்தை காப்பாற்றி ஜனத்தை அளிக்க சித்தம் கொண்டார் .  அப்படியே கிமு 1656 ம வருடம் ஜலப்பிரளயம் வந்து ஜனசமுதாயம் அழிக்கப்பட்டது.
 
 

ஜலப்பிரளயதிர்க்கு பின்னர் நோவா தேவனுக்கு பலியிட்டு தேவனை ஆராதித்தார் ( ஆதி 8 ; 20 ) . இந்த ஆராதனையும் பின்னர் இல்லாமற் போயிற்று . ஜலப்பிரளயதிர்க்கு பின்னர் 367 ம வருடம் வரவே தேவ ஆராதனை முற்றிலும் அற்று போய் விக்கிரக ஆராதனை உண்டாயிற்று . அப்படி விக்கிரகங்களை ஆராதித்த ஆபிரகாமை கர்த்தர் அழைத்தார்  ( யோசுவா 24 : 2  ).  ஆபிரகாம் கர்த்தரின் அழைப்பிற்கு இசைந்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தார் .  ஆபிரகாம் கூடாரவாசியாய் இருந்தும் போன போன இடங்களில் எல்லாம் கர்த்தரை ஆராதித்தார் . (  ஆதி 13 ; 4 , 18   ;  ஆதி 15 : 9 - 12 ).  ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு பலிபீடங்களை கட்டி கர்த்தரை ஆராதித்தார் ( ஆதி 26 : 25 ).  பின்னர் ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபும் ஆராதனை நடத்தினார் ( ஆதி 35 : 7 , 8  )
 
 

கர்த்தர் ஆபிரகாமிடத்தில் உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் பரதேசிகளாய் இருந்து 400 வருடம் உபத்திரப்படுவார்கள் .  நாலாம் தலைமுறையில் விடுதலை அடைந்து வாக்குதத்தம்  பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்கு திரும்ப வருவார்கள் என்றும் சொன்னார் ( ஆதி 15 : 13 - 16 ). இந்த தீர்க்க தரிசனத்தின் படி யாக்கோபின் 130 வது வயதில் ஆபிரகாமின் சந்ததி எகிப்துக்கு போனார்கள் ( ஆதி 47  : 9  ).  நான்காம் தலைமுறை வரும் பொழுது கர்த்தர் அவர்களை விடுவிக்க சித்தம் கொண்டார் .  நான்கு தலைமுறைகலாவன :-  எகிப்துக்கு போனவர்களில் ஒருவன் லேவி .  அவன் மகன் கோகாத் .  அவர் மகன் அம்ராம் .  அவர் மகன் மோசே .  மோசே நான்காம் தலைமுறை காரன் . அவரே இஸ்ரவேலை கானானுக்கு வழிநடத்தினவர்  ( I நாளா 6 ; 1 - 3 )
 
 

இந்த அடிமைத்தன காலத்தில் தேவ ஆராதனை முற்றிலுமாய் நின்று போய் இருந்தது .  ஆதலால் திரும்பவும் இஸ்ரவேல் கர்த்தரை சேவிப்பதற்காக கானானுக்கு கர்த்தர் வழிநடத்தினார் .  எகிப்து தேசத்தில் இருந்து சீனாய் மலை அருகில் வரவும்  , கர்த்தர் சீனாய் மலைக்கு மோசேயை அழைத்தார் . அம்மலையில் வைத்து கர்த்தரை ஆராதிக்க வேண்டிய மாதிரி , கைக்கொள்ள வேண்டிய கட்டளை யாவையும் கர்த்தர் மோசேக்கு கற்ப்பித்து கொடுத்தார் .  இவ்விதமாய் தம்மை ஆராதிப்பதற்க்காக மோசேக்கு கர்த்தர் காட்டி கொடுத்த கூடாரம் தான் ஆசரிப்பு கூடாரம் ...


------- தொடரும் --------------
 

2 கருத்துகள்:

  1. இந்த சபையை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் !!!
    http://brunstadchristianchurchreview.blogspot.in/

    பதிலளிநீக்கு
  2. இந்த சபையை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் !!!
    http://brunstadchristianchurchreview.blogspot.in/

    பதிலளிநீக்கு