ஞாயிறு, நவம்பர் 20, 2011

உன்னத பாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் 3

கடந்த இரண்டு பதிவுகளில் உன்னதப்பாட்டை குறித்த முன் உரைகளையும் ,  இந்த புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதயும் பார்த்தோம் .  தொடர்ந்து ஒவ்வொரு வசனங்களாக நாம் தியானிப்போம் ...



 முதலாம் அதிகாரம் : 

உன்னத 1  ; 2  , " அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக "
மணவாட்டி ( தேவனுடைய பிள்ளை ) மணவாளனாகிய இயேசுவின் மீதுள்ள அன்பை விளங்க பண்ணுகிறாள் .  ஏனெனில் மனவாட்டிக்கு மணவாளன் மீது அன்பு பெருகி விட்டது . ஆனபடியால் இப்பொழுது மணவாளனின் முத்தத்தை நாடுகிறாள் .  நாம் ஒரு குழந்தையை தூக்கும் போது அதன் மீது அன்பு பெருகுவதால் நாம் முத்தமிடுகிறோம் .  ஏன் எனில் அன்பு பெருகும் போது தான் முத்தமிடுவார்கள் . முத்தத்தின் பிறப்பிடம் அன்பு தான் .

வேதத்தில் இரண்டு வகை முத்தம் காணப்படுகிறது .
  1. வஞ்சனையின் முத்தம் ( நீதி 27  : 6 )
  2. அன்பின் முத்தம் .
 வஞ்சனையின் முத்தம் :
இது யூதாசின் முத்தம் .  யூதாஸ் இயேசுவோடு 3 . 5  வருடங்கள் நடந்தான் . அருமையான போதனைகளை கேட்டான் . சீசன் என்ற பெயரை பெற்றான்.   எனினும் பொருளாசைக்கு இடம் கொடுத்தான் . அதனால் தான் வேதபாரகர்  , பரிசேயர் ஆகியோரை அன்டினான் . பிராண நாதனை காட்டி கொடுக்க 30  வெள்ளி காசை பெற்றான்.  எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டு இயேசுவை அண்டினான்.  " ரபீ... நீர் வாழ்க " என்று கழுதை கட்டி முத்தமிட்டான் . இதுவே வஞ்சனையின் முத்தம் .  முடிவில் சமாதானத்தை இழந்தான் ....


இவ்வாறே , தாவீது ராஜாவின் குமாரன் அப்சலோம் எழும்பினான் .  அப்சலோம் அழகில் சிறந்தவன்  என்றாலும் தன தம்பியாகிய அம்னோன் செய்த தவறுக்காய் அவனை கொன்றான் .  ( II  சாமு 13 ம்  அதி ).    இதினால் தன தகப்பனாகிய தாவீதால் தண்டிக்கப்பட்டான் . தகப்பன் தன்னை தண்டித்ததை அப்சலோம் பகையாக மனதில் வைத்து கொண்டு தகப்பனின் சிங்காசனத்தை கவிழ்த்து அவனை கொலை செய்யா தீர்மானித்தான் .   அதற்காக தகப்பன் கீழ் உள்ள ஜனங்களை கைவசமாக்க முயன்றான் .  ஆகையால் அவன் ஜனங்களை காணும் போது கட்டி முத்தமிட்டு அவர்களை வசிய படுத்தினான் என்று  வேதத்தில் காண்கிறோம்  ( II சாமு 14  :  1  -  6  ) .  ஆனால் அவனுடைய முடிவும் பரிதாபம் ...!

 ஆகவே உலகில் பொருளாசை ,  உலக ஆசை இவைகளை வைத்து கொண்டு அன்புள்ளவர்களை போல நடிப்பதும் , முத்தமிடுவதும் வஞ்சனையான முத்தங்கள் .  இவைகள் தான் உலக மனிதர்கள் நமக்கு கொடுப்பது .  இவைகளின் முடிவு பெரும்பாலும் பரிதாபம் .


 அன்பின் முத்தம் :

இது உள்ளத்தில் இருந்து எழும்பி வரும் முத்தம் .  இந்த முத்தமே யாவருக்கும் தேவையானது .  வீரனாகிய தாவீது கோலியாத்தை கொன்று இஸ்ரவேலுக்கு ஒரு பெரிய ரட்சிப்பை கொண்டு வந்தான் .  இதை கண்ட சவுலின் குமாரனாகிய யோனத்தானின் இருதயம் தாவீதோடு ஒட்டி கொண்டது .  அதனால் தான் தாவீதின் ஆபத்து காலத்தில் இந்த யோனத்தான் தன நண்பனாகிய தாவீதை காட்டி அணைத்து முத்தமிட்டு தன் தகப்பனின் தீய நோக்கத்தை அறிவித்தான்  ( I சாமு 20  : 41 )

இது தான் அன்பின் முத்தம் .  உலக தோற்ற முதல் அன்பாகவே இருக்கிற ஒரு தேவன் உண்டு .  அவர் அன்பாகவே இருக்கிறார் .  அந்த மணவாளனாகிய இயேசுவின் முத்தத்தை மணவாட்டி விரும்புகிறாள் .  ஏன் எனில் ,  அந்த அன்பின் முத்தத்தில் ஆறுதல் இருக்கிறது , சமாதானம் இருக்கிறது , மணவாட்டியின் மேல் உள்ள வாஞ்சை இருக்கிறது .


அதனால் இந்த உலகத்தின் மாய்ந்து போகும் அன்பை விட  , மாறாத மணவாளன் இயேசுவின் அன்பை தேடுவோம் ......!

தொடரும் .....



ஞாயிறு, நவம்பர் 13, 2011

உன்னதபாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் இரண்டு .


சென்ற வாரத்தில் உன்னதபாட்டின் முன்னுரையை நாம் தியானித்தோம் .  தொடர்ந்து இந்த வாரத்திலும் உன்னதப்பாட்டின் தியானத்தை தொடர்வோம் .


உன்னதப்பாட்டை பங்கு பங்காய் வைத்து படிக்கும் விதம் :

  1. முதலாம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் நான்காம் அதிகாரம் ஏழாம் வசனம் முடிய இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளை தட்டி எழுப்பி பூரணத்திற்கு நடத்தும் அனுபவத்தை காணலாம் .
  2. நான்காம் அதிகாரம் எட்டாம் வசனம் முதல் ஆறாம் அதிகாரம் பன்னிரெண்டாம் வசனம் முடிய பூரணமடையும் போது சோர்வடைவதையும் , மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டு பூரனப்படுவதையும் , பூரனமடைந்தவர் எடுத்து கொள்ள படுவதையும் , பூரனமடையாதோர் கைவிடப்படுவதையும் காணலாம் .
  3. ஏழாம் அதிகாரம் ஆகாயமண்டலதிற்க்கு எடுத்து கொள்ளப்பட்ட மணவாட்டி அல்லது பூரணபட்டோர் உலகத்தில் இருக்கும் போது மனவாளனுக்காக செய்த ஊழியங்களை மணவாளன் புகழ்ந்துரைக்கும் அனுபவங்களை காணலாம் .
  4. எட்டாம் அதிகாரமோ , கைவிடப்பட்ட சபையின் அங்கலாய்ப்பையும் , ஆயிரமாண்டு பூமியில் வாழ மணவாளன் மனவாட்டியோடு பூமிக்கு வரும் காட்சியையும் காணலாம் .
 குறிப்பு 1  :  உன்னதப்பாட்டில் குறிப்பிடபட்டிருக்கும்  சாலமன் என்பதை சமாதான பிரபுவாகிய இயேசு என்றும் , சீயோன் குமாரத்தி என்பதை மணவாட்டி என்றும் , எருசலேம் குமாரத்தி என்பதை பரிசுத்த ஆவி பெற்று பூரனப்படாதவர்கள் என்றும் வைத்து படிக்க வேண்டும் .

குறிப்பு 2  : உன்னத பாட்டிலுள்ள வசனங்களை படிக்க ஆரம்பிக்கும் முன்பாக ரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அனுபவம் அடைந்தவனோடு கர்த்தர் பேசி முன்னேற்றி கொண்டு போகிறார் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் .

பாவத்தில் ஜீவிக்கும் அனுபவம் வேறு , இரட்சிக்கப்பட்ட அனுபவம் வேறு  , பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளும் அனுபவம் வேறு என்பதை நாம் கற்று இருக்க வேண்டும் .  ஏன் என்றால் அநேகர் உபதேசத்தின் வித்தியாசத்தை விளங்கி கொள்ளாமல் கலப்பான உபதேசத்திற்க்குள் அகப்பட்டு கலங்குகின்றனர் . 

 பாவத்தில் ஜீவிக்கிறவன் பாவியே . பாவிகளை ரட்சிக்க இயேசு உலகத்தில் வந்தார் .  I திமோ 1 : 15

இந்த இயேசுவை பாவி விசுவாசிக்கும் போது ரட்சிப்படைகிறான்  ரோமர் 10 : 9 , 10

இரட்சிக்கப்பட்ட பிறகு பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளுகிறான் .  இயேசுவோடு 3 . 5 வருடம் சீஷர்கள் நடந்த பின்னர் காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்று கொண்டனர் .  லூக்கா 24 : 49 .  அப்படியே பெந்தெகொஸ்தே நாளுக்கு பின்னரும் சமாரியர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று கொண்ட பின்னரும் பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளவில்லை என்று காண்கிறோம் .  அப் 8 : 12 - 14

 பரிசுத்த  ஆவியை பெற்று கொள்ளும் போது பரிசுத்த ஆவியை பெற்று கொண்டேன் என்பதற்கு அடையாளமாக அந்நிய பாஷை அவனில் கிரியை செய்கிறது .  அந்நிய பாஷை இருவிதமாக கிரியை நடப்பிக்கிறது .

ஓன்று அந்நிய பாஷை வரம் .  மற்றொன்று அந்நிய பாஷை அடையாளம் .  அந்நிய பாஷை வரமாக கொடுக்கப்படா விட்டால் எப்பொழுதும் அந்நிய பாஷையில் பேசுவதில்லை .  ஆவியினால் நிரம்பும் போது மாத்திரமே அந்நிய பாஷை அடையாளம் அவனில் காணப்படும் .  இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .  இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .  இவ்வாறு பரிசுத்த ஆவி பெறும் போது தான் மனித உள்ளத்தில் தேவ அன்பு ஊற்றப்படுகிறது .  ரோம 5 : 5 .  இவ்வித அன்பினால் நிரப்பப்பட்ட விசுவாசி அலது சபையே தேவனுடைய அன்பை நாடுவாராயிருக்கும் . அவ்வித அன்பை நாடுகிற படியினால் மணவாளனை பார்த்து மணவாளி சொல்லுகிற காரியங்கள் .......




.... தொடரும் .......

திங்கள், நவம்பர் 07, 2011

உன்னத பாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் ஓன்று

உன்னதப்பாட்டை பற்றிய பற்பல அபிப்பிராயங்கள் :


உன்னதப்பாட்டை குறித்து பலரும் பற்ப்பல அபிப்பிராயங்கள் கூறுவதுண்டு .   அவற்றுள் சிலர் , இப்புத்தகமானது யூதர்களின் கலியாண நாட்களில் கல்யாணதிர்க்காய் நியமிக்கப்பட்ட புருசனையும் ஸ்திரீகளையும் குறித்து புகழ்ந்து பாடி வந்த பாட்டு எனக் கூறுவார்கள் .

சிலரோ ,  ஒரு ஸ்திரியானவள் ஒரு பெண் குழந்தையை பெற்று கிச்சிலி மரத்தடியில் போட்டு விட்டு போய் விட்டாள்.  அந்த குழந்தையானது தொப்புள் அறுக்கப்படாமல் அவ்விடத்திலே கிடந்தது .  இதை கண்ணுற்ற ஒரு ஆட்டிடையன் குழந்தையின் மீது இரக்கங்கொண்டு அதின் தொப்புளை அறுத்து , கழுவி சுத்தம் செய்து அவன் வீட்டில் கொண்டு போய் வளர்த்தான் .  அந்த குழந்தை வளர்ந்து வரவே அவளை விவாகம் பண்ணி கொள்ள எண்ணினான் . இவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்ணை தனது திராட்சை தோட்டத்திற்கு காவல்க்காரியாக நியமித்து வைத்தான் .  அவள் திராட்சை தோட்டத்தை காத்து வரவே , ஒரு நாள் சாலமன் ராஜ காட்டில் வேட்டையாட சென்றிருந்தார் . அப்பொழுது அவர் திராட்சை தோட்டத்தை காத்து கொண்டிருந்த அந்த பெண்ணின் மேல் நேசம் கொண்டு அவளை அரண்மனைக்கு அழைத்து கொண்டு போனார் .  ஆனால் அரண்மனையின் சகல மேன்மைகளையும் கண்ட அந்த பெண் அவைகளின் மேல் நேசம் கொள்ளாமல்  ,  அந்த ஆட்டிடையன் மேல் உள்ள நேசத்தினால் புலம்பி கொண்டு இருந்தாள்.  இதை கண்ட சாலமன் அந்த பெண் இடையன் மேல் கொண்ட நேசத்தை அறுக்க முடியாது என்று கருதி அந்த பெண்ணை திரும்ப காட்டில் கொண்டு போய் விட்டார் என்ற சரித்திரம் கூறுவாரும் உண்டு .

சிலரோ , சாலமன் ராஜா தேவ ஆவியினால் நிரம்பியிருந்த காலத்தில் வரப்போகும் மணவாளனாகிய இயேசுவை குறித்தும்  மணவாட்டி சபையை குறித்தும் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்க தரிசன புத்தகம் எனகூருபவரும் உண்டு ..



நமது அபிப்பிராயம் :-

வேத புஸ்தகத்தில் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு  என இரு புஸ்தகங்கள் உள்ளது .  அதில் பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளது .   இந்த 39 புஸ்தகங்களிலும் தீர்க்கதரிசன பாகங்களும் உண்டு .    என்றாலும் அப்புத்தகங்களை சரித்திர புத்தகங்கள்  , தீர்க்க தரிசன புத்தகங்கள் , சங்கீத புத்தகங்கள் எனப் பிரித்து படிக்கலாம் .
 
 சரித்திர புத்தகங்களை எடுத்தால் எல்லா புத்தகங்களும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையதாக இருப்பதை காணலாம் .   ரூத்தின் சரித்திரத்தை எடுத்து கொண்டால் இப்புத்தகத்திற்கு ஏன் வேத புத்தகத்தில் இடம் கொடுக்க வேண்டுமென்று கேட்போமானால் தாவீதின் வம்ச வரலாற்றை தெளிவுடன் அறிந்து கொள்ள இப்புத்தகம் அவசியம் .  ஆகவே சரித்திர புத்தகங்கள் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது .
 
 ஆனால் உன்னதபாட்டோ இடைப்பெண்ணின் சரித்திரமென கூறும் போது மற்ற ஆகமங்களோடு எவ்வித தொடர்பும் அந்த புத்தகத்திற்கு இல்லை.   ஒரு வேளை சாலமனின் நேசத்திற்கு ஏற்ப்பட்ட தோல்வி என கூறக்கூடுமானால் அவரின் இதர தோல்விகளை போல இதையும் குறிப்பிடலாம் .  ஆனால் சாலமோனின் தோல்வியை ஒரு புத்தகமாகி அதற்கு ஆங்கிலத்தில் " சாலமனின் பாட்டு " எனவும்  மலையாளத்தில் " உத்தம கீதம் "  எனவும் ,  தமிழில் " உன்னத பாட்டு " எனவும் பெயரிட முடியுமோ ..? ஒரு காலும் முடியாது .
 
 தமிழ் மொழி பெயர்ப்பில் இந்த புத்தகத்திற்கு உன்னத பாட்டு என்ற அழகான பெயரை வாசிக்கிற போதே இந்த புத்தகத்தின் அழகு  ஜொலிக்கிறது .   மெய்யாகவே ஆண்டவர் இப்புத்தகத்தில் உன்னதத்தில் உள்ள பொக்கிசங்களை அடக்கியே வைத்திருக்கிறார் .  ஆகவே உன்னததிர்க்குரிய பொக்கிசத்தை பூமிக்குரியதாக்கி அதன் கனத்தை குறைப்பது ஞானக் குறைவே ஆகும் . 
 
 ஆகவே இந்த புத்தகமானது  " வரப்போகிற மணவாளனாகிய இயேசுவை பற்றியும் மணவாட்டி சபையை பற்றியும் சபை பூரணப்பட வேண்டிய வித பற்றியும் ஆவியானவர் உவமான ரூபத்தில் தீர்க்க தரிசனமாக முன் குறித்த தீர்க்க தரிசன புத்தகம் " என்பது தான் வெளிப்பாடு .  இதை அனுசரித்தே இந்த புத்தகத்தின் மகத்துவங்களை நாம் தொடர்ந்து தியானிப்போம் ..

எல்லா துதியும் , கணமும் , மகிமையும் அவருக்கே .... ஆமென் ....

------  தொடரும்  ---------

-------------------------------------------------------------------------------------------------------------
மிகவும் கனத்திற்கு உரிய ஒரு தேவ ஊழியரின் புத்தகத்தின் பகுதிகளை மாத்திரம் நான் தொடர்ந்து இந்த பகுதியில்  பகிர்ந்து கொள்ளுகிறேன் .    

புதன், அக்டோபர் 26, 2011

வெளிச்சத்துக்காக காத்திருக்கிறோம்

பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.  இன்றும் பரிசுத்த வேதத்தில் இருந்து ஒரு நல்ல வேத பகுதியை நாம் தியானிக்கலாம்    ஏசாயா  59 : 9 ம் வசனம் சொல்லுகிறது . " வெளிச்சத்துக்கு காத்திருந்தோம்  , இதோ இருள் ;  பிரகாசத்துக்கு காந்திருந்தோம் ;  ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம் .."


அநேகம் பேரை அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கும் போதும் ,  அவர்களிடத்தில் பேசும்போதும் ஒரு காரியத்தை சொல்ல கேட்டிருக்கிறேன் .  நான் மிகவும் ஒரு நல்ல வாழ்வை விரும்புகிறேன் .. ஆனால் என் வாழ்க்கை முழுவதும் அந்தகாரமாகவே ( இருளாகவே ) இருக்கிறது என்று .   உண்மையில் இருதயத்தில் அல்லது வாழ்வில் இருள் வந்துவிட்டால் அந்த வாழ்வில் சந்தோசம் இருக்காது ,  நல்ல சமாதானம் இருக்காது .    இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான் (  யோவான் 12  : 35 )  என்றும்  ,    இருளில் கொள்ளைநோய் நடமாடும் ( சங்கீ 91 : 6 ) என்றும் பல இடங்களில் இருளின் வாழ்க்கையை குறித்து பரிசுத்த வேதம் சொல்லுகிறது .   

இந்த இருள் மனிதனுக்குள் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியாத நண்பர்கள் அநேகர் உண்டு.   பாருங்கள்  சத்துரு என்னை இருளில் இருக்கப் பண்ணுகிறான் ( சங்கீ 143  : 3 ) ,     மூடன் ( அறியாமை ) இருளில் நடக்கிறான் ( பிரசங்கி 2 :  14 ) ,   துன்மார்க்கர் இருளில் மௌனமாவார்கள்  ( 1 சாமு 2 : 9 ) என்று பரிசுத்த வேதம் ஏன் மனிதனுக்கு இருள் உண்டாகிறது என போதிக்கிறது.  

பிரியமானவர்களே  , நாம் செய்கிற சில காரியங்கள் தேவனுடைய பார்வையில் ஆகாததாய் இருக்கும்போதும்  , பிசாசின் போராட்டம் அதிகமாகும் போதும்  ,  நம்முடைய அறியாமையில் நாம் செய்கிற சில பாவங்கள் நிமித்தமும் இருளான /  அந்தகாரமான வாழ்க்கைக்குள் நாம் கடந்துவருகிறோம் .  அதனுடைய பாதைகள் எவ்வளவு வேதனை நிறைந்து காணப்படுகிறது என்பதை அறிந்தும் இருக்கிறோம்.    இந்த இருளில் இருக்கும் அநேக ஜனங்கள் ஒரு வெளிச்சத்துக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் அது மாதிரம்மல்ல அந்த வெளிச்சத்தை கண்டுகொள்ள முயற்சி செய்கிறார்கள்.
ஒரு எளிய காரியத்தை தான் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் .  இந்த இருள் வெளிச்சமாக மாற வேண்டுமெனில் வெளிச்சத்தை கொடுக்கிற இடத்தை நாம் கண்டுபிடிக்கவேண்டும்.    பரிசுத்த வேதம் யோவான் 1  : 9 ல் சொல்லுகிறது ,  "  உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி " .   ஆமென் .    இந்த உலகத்திலே மனிதனாய் பிறந்த ஆண்டவர் ஏசுவே இந்த உலகத்தில் வெளிச்சமாயிருக்கிறார்.    யோவான் 1 : 4 ம் வசனம் சொல்லுகிறது  , " அவருக்குள் ஜீவன் இருந்தது , அந்த ஜீவன் மனுசருக்கு ஒளியாயிருந்தது " 

இருளிலே கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என மீகா 7 : 8  ,   கர்த்தர் என இருளை வெளிச்சமாக்குகிறவர் என 2 சாமு 22 : 29  மற்றும் சங்கீ 18 : 28  ,  என்னை பின்பற்றுபவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்  என யோவான் 8 : 12  எனவும் பரிசுத்த வேதம் சொல்லுகிறது .

பிரியமானவர்களே இருளின் ( பிசாசின் ) அதிகாரத்தில் இருந்து நம்மை விடிவிக்கும் படியாகவே ஆண்டவர் இயேசு நமக்காக சிலுவையில் தம் ஜீவனியும் தந்தார்.   நாம் நம்முடைய பாவங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு அவரை நம் உள்ளத்தில் ஏற்றுகொண்டால் நம்முடைய இருளான வாழ்வை அவர் மாற்றிபோட்டு ,  இருளின் அதிகாரங்களுக்கு நம்மை அவர் விலக்கி ,  வெளிச்சத்தின் பிள்ளைகளாக நம்மை மாற்றி நம்முடைய பாவ ,  சாப ,  வியாதி கட்டுகளை அறுத்து நம்மை உயர்த்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .


ஒரு சிறிய ஜெபத்தை செய்வோமா ...?  

எங்கள் அன்புள்ள பரலோக பிதாவே  ,  இந்த வேளைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம் .   எங்கள் அந்தகாரங்களினால் நாங்கள் படுகிற வேதனைகளை நீர் அறிந்திருக்கிறீர் .  எங்கள் பாவங்களையும் ,  சாபங்களையும் தயை கூர்ந்து நீர் மன்னித்து  , எங்களை ரட்சியும் .  நீர் இந்த உலகத்தின் ரட்சகர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம் .  நீர் எங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் இப்பொழுது இருக்கிறீர் என்பதையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் .  பாவத்தின் மூலமாக ,  சாபத்தின் மூலமாக எங்கள் வாழ்வில் உள்ள எல்லா போராட்டங்களையும்  , வியாதிகளையும்  , சமாதான சீர்கேடுகளையும் எங்களை விட்டு அகற்றி வ்ளிச்சத்தின் ஆசீர்வாதங்களினால் எங்களை நிரப்பும் என கெஞ்சி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே ... ஆமென்..

பிரியமானவர்களே .... கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்டு உள்ளார் .  உங்களை அவர் ஆசீர்வதிப்பார் .   ஆமென்.


வியாழன், அக்டோபர் 13, 2011

MY SOUL PRAISE THE LORD - என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி


Greetings to all of you in the precious name of our Lord and our Saviour Jesus Christ. 

Dear Brothers & Sisters,  in Holy Bible Psalms 103 : 1 & 2 says “ My Soul , Praise the Lord , and all that is within me, praise HIS holy name.  My Soul praise the Lord, and do not forget all His benefits.”
(Holman Christian Standard bible)

Amen..  I love these words.  Its great to meditate the goodness of our God in our life.  Some times, we pray and He answers.  But you know one special thing? Without our prayer, He does many good things to our soul.

Let us see the things.

Vs 3 says “ He forgives all your sins”.  Of course, we believe God has cleansed our sins.  But god shown me a special passage from the Holy bible in this regard.  Let us go to II Samuel 5: 1 to 8.  David captured Zion and he despised the lame and the blind. It is said , “ the lame and the blind will never enter the house”.

You know the secret behind this. Jerusalem , the place of God was forbidden to the lame & blind. Who is Blind..?  we… Yes  we were blind by satan ( II Cor 4 : 4). Who is lame ..? we .. we had a wonderful Christian name .., but we were unable to walk to God and walk for God..

But in new testament , thank god .. a wonderful incident had been narrated by our Lord Jesus Christ.

Yes … Come on let us go to … Luke 14 : 15 – 24.  Just read the passage.  When the called people hesitated to join the kingdom of God,  Vs 21 says “ bring here the blind and the lame…”  amen..

Dear Brothers & Sisters , John 1 : 11 says “ He came to His own and His own people did not receive Him..”.  then God decided to call not by our faith but by His grace and made a permanent place in his House. Amen.. Halleluiah …!

See John 1 : 12 , 13 says ,” …. You are children of God.. and you are born of God..” Amen…

Is it great to meditate to these words, “ He has forgiven my sin and made me as HIS SON”

“My Soul , Praise the Lord , and all that is within me, praise HIS holy name.  My Soul praise the Lord, and do not forget all His benefits”

Amen .  Message continues in the coming days.   May god bless you.  



ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.  

பிரியமான சகோதர சகோதரிகளே ,  சங்கீதம் 103 : 1 & 2  சொல்லுகிறது, "  என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே"

ஆமென்இந்த வார்த்தைகளை மிகவும் நேசிக்கிறேன்கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்ப்பது மிகவும் அற்புதமான விஷயம்சில வேளைகளில் நாம் ஜெபிக்கிறோம்அவர் பதில் கொடுக்கிறார்ஆனால் உங்களுக்கு ஒரு விசேஷம் தெரியுமா..?  ஜெபிக்காமலே அவர் நம் ஆத்துமாவிற்கு அநேகம் நன்மைகளை செய்கிறார்.

அவைகளை நாம் தியானிப்போம். வசனம்சொல்லுகிறது , " அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து ..."  நாம் விசுவாசிக்கிறோம் கர்த்தர் நம் பாவங்களை மன்னித்தார் என்றுஇது விஷயமாக கர்த்தர் ஒரு விசேஷித்த வேத பகுதியை எனக்கு காண்பித்தார்.   II சாமு 5 : 1  - 8 வாசித்து பாருங்கள்தாவீது சீயோனை பிடித்தான் அவனது ஆத்துமா குருடரையும் சப்பாணிகளையும் வெறுத்ததுஅதனால் அவர்கள் சியோன் கோட்டைக்குள் பிரவேசிக்கும் தகுதி இழந்தார்கள்

இதற்க்கு பின் உள்ள ரகசியம் என்ன தெரியுமா..?  எருசலேம் ., மகாராஜாவின் நகரம் குருடருக்கும் சப்பானிகளுக்கும் விலக்கப்பட்டிருந்ததுயார் குருடன்நாம்...  ஆம் ..II  கொரிந்தியர் 4 : 4 ன் படி பிசாசு நம்மை குருடாக்கி வைத்திருந்தான்.   யார் சப்பாணிநாம் .. ஆம்..  நல்ல கிறிஸ்தவ பெயர்கள் நமக்கு இருந்தும் கர்த்தரை நோக்கியும் கர்த்தருக்காகவும் நடக்க முடியாத சப்பாணிகள்

ஆனால் புதிய ஏற்பாட்டில் ஒரு அருமையான சம்பவத்தை நம் அருள்நாதர் விளக்கினபடியால் அவருக்கு நன்றி.

லூக்கா 14  : 15  -  24  வரை வாசித்து பாருங்கள்அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு வர தயங்கினபோது வசனம் 21  சொல்லுகிறது குருடரையும் சப்பாணிகளையும் உள்ளே கொண்டு வாருங்கள் என்று.   ஆமென்.  அல்லேலுயா.

யோவான் 1 : 11  சொல்லுகிறது , " அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்சொந்தமானவர்களோ அவரை ஏற்று கொள்ளவில்லை. "   அதனால் கர்த்தர் நம்முடைய விசுவாசத்தின் படி அல்ல அவரது கிருபையினால் நம்மை அழைக்க சித்தம் கொண்டு நமக்கென ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணினார்ஆமென் ... அல்லேலுயா


யோவான் 1  : 12  , 13  சொல்லுகிறது " நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் , தேவனால் பிறந்தவர்கள்"

கர்த்தர் நம்மை மன்னித்து அவரது பிள்ளைகளாய் மாற்றி உள்ளார் என்பதை தியானிக்க எதனை இனிமை.



என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே"

வருகிற நாட்களில் இந்த செய்தி தொடரும்கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!





திங்கள், அக்டோபர் 03, 2011

IT IS TIME TO SHOW FAVOR - தயை செய்யும் நேரம் வந்தது



My Dear Brother & My Sister,

Greetings in the wonderful name of our Lord & Our Saviour Jesus Christ.

Today let us meditate Psalms 102 : 13 “ you will arise and have compassion on Zion, for it is time to show favor to her; the appointed time has come”

In bible, we can see many covenants & promises of God. But it is beautiful to see, there is an appointed time for the fulfillment.

God has promised Abraham to give a son at his 75th year.  But he had to wait 25 years for the fulfillment of that promise.  Just imagine … Promise is true.  It will be fulfilled at the appointed time.

In the life of Joseph, God shown him a vision at his 17th year. But he waited 13 years as a slave for the fulfillment. 

Amen… I feel overwhelming happy to declare here that God is having an appointed time for you.  Now the situations, circumstances, happenings may be entirely different from your Vision & Promise.  But my dear friend, God says to you that the appointed time has come.

Amen… you believe these words and give thanks to HIM.  You are going to see the favor of God and going to receive your blessings.

May God Bless you.


You can send your prayer request to our email yesuperiyavar@yahoo.com




ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

இன்று சங்கீதம் 102 : 13 யை தியானிப்போம்.  " தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்அதற்கு தயை செய்யும் காலமும், அதற்காக குறித்த நேரமும் வந்தது"

பரிசுத்த வேதத்தில் தேவனுடைய பல வாக்குததங்களையும் உடன்படிக்கைகளையும் நாம் பார்க்க முடியும்.   ஆனால் அது நிறைவேறுதலுக்கு குறித்த காலத்தை வைத்திருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியம்?

ஆண்டவர் ஆபிரகாமுக்கு 75 வது வயதில் ஒரு மகனை தருவதாக வாக்கு செய்தார்.   ஆனால் அந்த வாக்கு நிறைவேறுவதற்கு 25  வருடங்கள் காத்திருந்தார்.   கொஞ்சம் யோசித்து பாருங்கள்.   வார்த்தை உண்மை உள்ளதுஅது குறித்த காலத்தில் நிச்சயம் நிறைவேறும்.

யோசேப்பின் வாழ்க்கையை எடுத்து பாருங்கள்ஆண்டவர் அவருக்கு 17  வயதில் தரிசனம் கொடுத்தார்அந்த தரிசனத்தின் நிரைவேருதலுக்காக 13  வருடங்கள் அடிமையாக காத்திருந்தார்.

ஆமென்..    கர்த்தர் உங்களுக்கு ஒரு குறித்த காலத்தை வைத்திருக்கிறார் என்பதை அறிவிப்பதில் நான் மிகுந்த சந்தோசம் அடைகிறேன்.   இப்பொழுது உங்கள் வாழ்கையில் கர்த்தர் கொடுத்த வார்த்தைக்கு சம்பந்தம் இல்லாத எதோ ஓன்று நடப்பதாக தோன்றலாம் .   ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் " உனக்கு குறிக்கப்பட்ட காலம் வந்திருக்கிறதுஆமென் .

இந்த வார்த்தைகளை விசுவாசித்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள்.   நீங்கள் கர்த்தருடைய தயவை காண போகிறீர்கள்கர்த்தர் உங்களுக்கு வைத்துள்ள ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்ள போகிறீர்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக


உங்கள் ஜெப விண்ணப்பங்களுக்கு


 



                                                                                                  

வியாழன், செப்டம்பர் 29, 2011

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் ...?



கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

வேதம் சொல்லுகிறது " பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்செருபாபேலுக்கு முன்பாக சம்பூமியாவாய்தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்அதற்க்கு கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்"  -  சகரியா  4 : 7


பிரியமானவர்களே இந்த செருபாபேல் மற்றும் ஆசாரியனாகிய யோசுவாவும் சிறையிருப்பில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை எருசலேமுக்கு நடத்தி வந்து முதலாவது ஒரு பலிபீடத்தை கட்டி பலி செலுத்தின பிறகு தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள்.   ஆனால் சத்துருக்கள் நிமித்தம் 16  வருடங்கள் அந்த வேலை தடைபட்டதுஅது ஒரு பெரிய மலை போன்ற சோதனை தான் அவர்களுக்கு.   ஆனால் 16  வருடங்கள் கழித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த தீர்க்க தரிசன வாக்கியங்களின் படியே , அந்த பெரிய மலை போன்ற சோதனையை தகர்த்து அந்த ஆலயத்தை கட்டி முடித்தார்கள்.

பிரியமானவர்களே..,   இதை போல பெரிய மலை போன்ற சோதனைகள் உங்கள் முன்பு இப்பொழுது காணப்படலாம்.   என்ன செய்வது என்று நீங்கள் திகைத்து நிற்கலாம்.   இந்த பெரிய மலையை தாண்டி எப்படி என்னால் நடக்க முடியும் என்று நினைக்கலாம்.   ஆண்டவர் இன்று சொல்லுகிற வார்த்தை என்ன தெரியுமா " மலை போன்ற பிரச்சினையே நீ என் பிள்ளைக்கு முன்பாக எம்மாத்திரம் ..?   நீ சம பூமியாவாய்"    ஆமென் ..

வார்த்தையை விசுவாசியுங்கள் .   வார்த்தையை அறிக்கை செய்யுங்கள் ..    உங்கள் முன்பு இருக்கும் பெரிய பர்வதம் சமபூமியாவதை காண்பீர்கள்.   பலன் கொண்டு திடமனதாயிருங்கள் .   உலகத்தில் இருப்பவனை காட்டிலும் உங்களில் இருப்பவர் பெரியவர்.   ஆமென்.   கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.   

உங்கள் ஜெபதேவைகளை எங்களுக்கு எழுதலாமே ...
எங்கள் E -மெயில் அட்ரஸ் : yesuperiyavar@yahoo.com