ஞாயிறு, நவம்பர் 20, 2011

உன்னத பாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் 3

கடந்த இரண்டு பதிவுகளில் உன்னதப்பாட்டை குறித்த முன் உரைகளையும் ,  இந்த புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதயும் பார்த்தோம் .  தொடர்ந்து ஒவ்வொரு வசனங்களாக நாம் தியானிப்போம் ...



 முதலாம் அதிகாரம் : 

உன்னத 1  ; 2  , " அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக "
மணவாட்டி ( தேவனுடைய பிள்ளை ) மணவாளனாகிய இயேசுவின் மீதுள்ள அன்பை விளங்க பண்ணுகிறாள் .  ஏனெனில் மனவாட்டிக்கு மணவாளன் மீது அன்பு பெருகி விட்டது . ஆனபடியால் இப்பொழுது மணவாளனின் முத்தத்தை நாடுகிறாள் .  நாம் ஒரு குழந்தையை தூக்கும் போது அதன் மீது அன்பு பெருகுவதால் நாம் முத்தமிடுகிறோம் .  ஏன் எனில் அன்பு பெருகும் போது தான் முத்தமிடுவார்கள் . முத்தத்தின் பிறப்பிடம் அன்பு தான் .

வேதத்தில் இரண்டு வகை முத்தம் காணப்படுகிறது .
  1. வஞ்சனையின் முத்தம் ( நீதி 27  : 6 )
  2. அன்பின் முத்தம் .
 வஞ்சனையின் முத்தம் :
இது யூதாசின் முத்தம் .  யூதாஸ் இயேசுவோடு 3 . 5  வருடங்கள் நடந்தான் . அருமையான போதனைகளை கேட்டான் . சீசன் என்ற பெயரை பெற்றான்.   எனினும் பொருளாசைக்கு இடம் கொடுத்தான் . அதனால் தான் வேதபாரகர்  , பரிசேயர் ஆகியோரை அன்டினான் . பிராண நாதனை காட்டி கொடுக்க 30  வெள்ளி காசை பெற்றான்.  எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டு இயேசுவை அண்டினான்.  " ரபீ... நீர் வாழ்க " என்று கழுதை கட்டி முத்தமிட்டான் . இதுவே வஞ்சனையின் முத்தம் .  முடிவில் சமாதானத்தை இழந்தான் ....


இவ்வாறே , தாவீது ராஜாவின் குமாரன் அப்சலோம் எழும்பினான் .  அப்சலோம் அழகில் சிறந்தவன்  என்றாலும் தன தம்பியாகிய அம்னோன் செய்த தவறுக்காய் அவனை கொன்றான் .  ( II  சாமு 13 ம்  அதி ).    இதினால் தன தகப்பனாகிய தாவீதால் தண்டிக்கப்பட்டான் . தகப்பன் தன்னை தண்டித்ததை அப்சலோம் பகையாக மனதில் வைத்து கொண்டு தகப்பனின் சிங்காசனத்தை கவிழ்த்து அவனை கொலை செய்யா தீர்மானித்தான் .   அதற்காக தகப்பன் கீழ் உள்ள ஜனங்களை கைவசமாக்க முயன்றான் .  ஆகையால் அவன் ஜனங்களை காணும் போது கட்டி முத்தமிட்டு அவர்களை வசிய படுத்தினான் என்று  வேதத்தில் காண்கிறோம்  ( II சாமு 14  :  1  -  6  ) .  ஆனால் அவனுடைய முடிவும் பரிதாபம் ...!

 ஆகவே உலகில் பொருளாசை ,  உலக ஆசை இவைகளை வைத்து கொண்டு அன்புள்ளவர்களை போல நடிப்பதும் , முத்தமிடுவதும் வஞ்சனையான முத்தங்கள் .  இவைகள் தான் உலக மனிதர்கள் நமக்கு கொடுப்பது .  இவைகளின் முடிவு பெரும்பாலும் பரிதாபம் .


 அன்பின் முத்தம் :

இது உள்ளத்தில் இருந்து எழும்பி வரும் முத்தம் .  இந்த முத்தமே யாவருக்கும் தேவையானது .  வீரனாகிய தாவீது கோலியாத்தை கொன்று இஸ்ரவேலுக்கு ஒரு பெரிய ரட்சிப்பை கொண்டு வந்தான் .  இதை கண்ட சவுலின் குமாரனாகிய யோனத்தானின் இருதயம் தாவீதோடு ஒட்டி கொண்டது .  அதனால் தான் தாவீதின் ஆபத்து காலத்தில் இந்த யோனத்தான் தன நண்பனாகிய தாவீதை காட்டி அணைத்து முத்தமிட்டு தன் தகப்பனின் தீய நோக்கத்தை அறிவித்தான்  ( I சாமு 20  : 41 )

இது தான் அன்பின் முத்தம் .  உலக தோற்ற முதல் அன்பாகவே இருக்கிற ஒரு தேவன் உண்டு .  அவர் அன்பாகவே இருக்கிறார் .  அந்த மணவாளனாகிய இயேசுவின் முத்தத்தை மணவாட்டி விரும்புகிறாள் .  ஏன் எனில் ,  அந்த அன்பின் முத்தத்தில் ஆறுதல் இருக்கிறது , சமாதானம் இருக்கிறது , மணவாட்டியின் மேல் உள்ள வாஞ்சை இருக்கிறது .


அதனால் இந்த உலகத்தின் மாய்ந்து போகும் அன்பை விட  , மாறாத மணவாளன் இயேசுவின் அன்பை தேடுவோம் ......!

தொடரும் .....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக