ஞாயிறு, ஜனவரி 08, 2012

தைரியமாயிருங்கள் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதர  , சகோதரிகளுக்கு  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .....

இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் , ஏதோ ஒரு நிலையில்  , எதையோ நினைத்து பயந்து போய் இருக்கிறார்கள் .  சிலர் வியாதியை நினைத்து ...... சிலர் எதிர் காலத்தை நினைத்து ...... சிலர் கடும் கடன் பிரச்சினையை நினைத்து .......இன்னும் சிலர் தொடரும் போராட்டங்களை நினைத்து ...... பயம் ... பயம் ......


 உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை இன்று ஆண்டவர் தருகிறார் ...."தைரியமாயிருங்கள்".   ஆமென்

 பிரியமானவர்களே எப்படி நம்மால் தைரியம் அடையமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம் .  சில வழிகளை பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது .

இயேசுவின் ரத்தத்தினால்  :   ஆம் பிரியமானவர்களே ,  எபிரேயர் 10  : 20  சொல்லுகிறது ,  " ....... அவருடைய  ( இயேசுவின் ) இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாகிறது" .    வானத்தையும் , பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமை உள்ள தேவன் இந்த உலகில் மனிதனாக பிறந்து உனக்காகவும் எனக்காகவும் கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினார் .   அந்த ரத்தத்தை குறித்து எபிரேயர் 12  : 24   சொல்லுகிறது...." நன்மையானவைகளை பேசுகிற இரத்தம் .... " என்று .   ஆம் .. பிரியமானவர்களே , இந்த உலகத்தில் உனக்காக யாரும் பரிந்து பேச இல்லாத காரணத்தினால் ஒரு வேளை நீ சோர்ந்து போய் இருக்கலாம் .  கர்த்தர் சொல்லுகிறார் , "  உனக்காக பரிந்து பேசுவதற்காகவே என் இரத்தத்தை நான் சிந்தியுள்ளேன் ....தைரியமாயிருங்கள்".    ஆமென் .


வாக்குதததினால்  :   ஆம் பிரியமானவர்களே ,  எபிரேயர் 13 : 5 , 6   சொல்லுகிறது, " .... நான் உன்னை விட்டு விலகுவதில்லை  , உன்னை கைவிடுவதில்லை என்று சொல்லி இருக்கிறாரே . அதினால் நாம் தைரியம் கொண்டு : கர்த்தர் எனக்கு சகாயர் , நான் பயப்படேன் , மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே ".    எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் பாருங்கள் .  மனிதனின் வாரத்தைகள் ஒருவேளை மாறி போய்விடலாம் . ஆனால் வாக்கு மாறாத தேவனின் வாரத்தைகளை குறித்து பரிசுத்த வேதம் சொல்லுகிறது , " வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் என் வாரத்தைகள் மாறாது " என்று .  இன்னும் ஒரு பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது , " தேவன் பொய் சொல்ல மனுஷன் அல்ல , மனம் மாற மனுபுத்திரனும் அல்ல , அவர் சொல்லியும் செயாதிருப்பாரோ ? ".   என் கலங்குகிறீர்கள் .  அவர் உங்களுக்கு சொன்ன வார்த்தை மாறாதது .  தைரியமாயிருங்கள்.  அவரின் வார்த்தையை பிடித்து கொள்ளுங்கள் .  பயம் உங்களை விட்டு ஓடி போகும் .


ஒரு சிறிய ஜெபத்தை விசுவாசத்தோடு செய்வோமா ...!
அன்புள்ள ஏசுவே , எங்கள் பரம தகப்பனே  , நீர்  தேவன் என்றும் , நீர் எனக்காக இந்த உலகத்தில் பிறந்து எனக்காக இரத்தம் சிந்தி மரித்து , மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தவர் என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  உம்முடைய இரத்தம் எனக்காக பரிந்து பேசுகிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  உம்முடைய வாக்குகள் மாறாதது என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  ஏசுவே ... என் உள்ளத்தில் நீர் வந்து வாசம் பண்ணும் .  என் காரியங்களை எல்லாம் பொறுப்பெடுத்து கொள்ளும் .  விசுவாசத்தினால் உண்டாகும் தைரியத்தினால் என்னை நிரப்பும் .  உம்முடைய நாமத்தை என் வாழ்வில் மகிமை படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ..... ஆமென் ..


பிரியமானவர்களே ....தைரியமாயிருங்கள். உங்கள் காரியம் ஜெயமாய் மாறும் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக