புதன், ஜனவரி 11, 2012

ஆசீர்வாதமாய் இருக்க வேண்டுமா ....?

உலகம் முழுவதும் உள்ள ஜனங்கள் ஆசீர்வாதமாய் வாழவேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள் .  தவறில்லை . ஆசீர்வாதமாய் வாழவேண்டும் என்பதற்காக சிலர் புண்ணிய யாத்திரைகள் , சிலர் நேர்ச்சைகள் , சிலர் மந்திரங்கள் என்று பல வழிகளை முயற்சிக்கிறார்கள் .  ஆனால் உண்மையான ஆசீர்வாதத்தை நாம் பெற்று கொள்ள வேண்டுமானால் சில வழிமுறைகள் உள்ளது .


பரிசுத்த வேதம் சொல்லுகிறது , " முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் . அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் "  - மத்தேயு 6 : 33

உலகத்தின் பெரும் ஜனக்கூட்டம் பெரும் செல்வதை தேடி தான் ஓடி கொண்டு இருக்கிறது .  ஆனால் பெரும்பாலும் அவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் தான் . காரணம் என்னவெனில் அவர்களின் தேடுதல் , ஓட்டம் எல்லாம் ஆசீர்வாதங்களை நோக்கி தானே தவிர , ஆசீர்வாதங்களை கொடுக்க வல்லமை உள்ள தேவனை நோக்கி அல்ல ....

 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் அப்படிஎன்றால் என்ன அர்த்தம் .   வேதம் சொல்லுகிறது , " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது ".  அப்படி என்றால் என்ன அர்த்தம் ...?  பாவத்திற்கு செத்து , நீதிக்கு என்று பிழைக்கிற அனுபவம் . பாவத்திற்கு எப்படி சாக முடியும் ...? பாவத்தை மன்னிக்க வல்லமை உள்ள இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் போதிக்கிறது .  அப்படி என்றால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது சொந்த ரட்சகராக மாற வேண்டும் .  அவர் ஒருவரே நமது இதயத்தின் ஏக்கம் , நோக்கம் எல்லாம் ஆக இருக்க வேண்டும் .


அந்த இயேசு நமது உள்ளத்தில் வரும் போது , என்ன நடக்கும் தெரியுமா ..? . 
வேதம் சொல்லுகிறது , " அவர் நமது குறைவுகளை எல்லாம் நிறைவாய் மாற்றுவார் ". 
சங்கீதம் 128  சொல்லுகிறது , " கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ , அவன் பாக்கியவான் .  உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் .  உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாயிருக்கும் ."

பிரியமானவர்களே ... உங்கள் வாழ்கையில் நமக்காக இந்த உலகத்தில் வந்த தேவனுக்கு முதல் இடம் கொடுங்கள் . அவர் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார் . உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாய் மாற்றி , நீங்கள் வாழும் இந்த பூமியில்  , உங்கள் சத்துருக்களுக்கு மத்தியில் ஒரு பந்தியை உங்களுக்கு ஆயத்தம் பண்ணி , உங்களை அபிஷேகித்து , உங்கள் வாழ்கையை நிரம்பி வழிய செய்து  , நன்மையால் உங்களை திருப்தி ஆக்குவார்.  பெரிய காரியங்களை எதிர்பாருங்கள் .  ஏசுவுக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணிப்போம் . ஆமென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக