ஞாயிறு, நவம்பர் 13, 2011

உன்னதபாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் இரண்டு .


சென்ற வாரத்தில் உன்னதபாட்டின் முன்னுரையை நாம் தியானித்தோம் .  தொடர்ந்து இந்த வாரத்திலும் உன்னதப்பாட்டின் தியானத்தை தொடர்வோம் .


உன்னதப்பாட்டை பங்கு பங்காய் வைத்து படிக்கும் விதம் :

  1. முதலாம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் நான்காம் அதிகாரம் ஏழாம் வசனம் முடிய இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளை தட்டி எழுப்பி பூரணத்திற்கு நடத்தும் அனுபவத்தை காணலாம் .
  2. நான்காம் அதிகாரம் எட்டாம் வசனம் முதல் ஆறாம் அதிகாரம் பன்னிரெண்டாம் வசனம் முடிய பூரணமடையும் போது சோர்வடைவதையும் , மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டு பூரனப்படுவதையும் , பூரனமடைந்தவர் எடுத்து கொள்ள படுவதையும் , பூரனமடையாதோர் கைவிடப்படுவதையும் காணலாம் .
  3. ஏழாம் அதிகாரம் ஆகாயமண்டலதிற்க்கு எடுத்து கொள்ளப்பட்ட மணவாட்டி அல்லது பூரணபட்டோர் உலகத்தில் இருக்கும் போது மனவாளனுக்காக செய்த ஊழியங்களை மணவாளன் புகழ்ந்துரைக்கும் அனுபவங்களை காணலாம் .
  4. எட்டாம் அதிகாரமோ , கைவிடப்பட்ட சபையின் அங்கலாய்ப்பையும் , ஆயிரமாண்டு பூமியில் வாழ மணவாளன் மனவாட்டியோடு பூமிக்கு வரும் காட்சியையும் காணலாம் .
 குறிப்பு 1  :  உன்னதப்பாட்டில் குறிப்பிடபட்டிருக்கும்  சாலமன் என்பதை சமாதான பிரபுவாகிய இயேசு என்றும் , சீயோன் குமாரத்தி என்பதை மணவாட்டி என்றும் , எருசலேம் குமாரத்தி என்பதை பரிசுத்த ஆவி பெற்று பூரனப்படாதவர்கள் என்றும் வைத்து படிக்க வேண்டும் .

குறிப்பு 2  : உன்னத பாட்டிலுள்ள வசனங்களை படிக்க ஆரம்பிக்கும் முன்பாக ரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அனுபவம் அடைந்தவனோடு கர்த்தர் பேசி முன்னேற்றி கொண்டு போகிறார் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் .

பாவத்தில் ஜீவிக்கும் அனுபவம் வேறு , இரட்சிக்கப்பட்ட அனுபவம் வேறு  , பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளும் அனுபவம் வேறு என்பதை நாம் கற்று இருக்க வேண்டும் .  ஏன் என்றால் அநேகர் உபதேசத்தின் வித்தியாசத்தை விளங்கி கொள்ளாமல் கலப்பான உபதேசத்திற்க்குள் அகப்பட்டு கலங்குகின்றனர் . 

 பாவத்தில் ஜீவிக்கிறவன் பாவியே . பாவிகளை ரட்சிக்க இயேசு உலகத்தில் வந்தார் .  I திமோ 1 : 15

இந்த இயேசுவை பாவி விசுவாசிக்கும் போது ரட்சிப்படைகிறான்  ரோமர் 10 : 9 , 10

இரட்சிக்கப்பட்ட பிறகு பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளுகிறான் .  இயேசுவோடு 3 . 5 வருடம் சீஷர்கள் நடந்த பின்னர் காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்று கொண்டனர் .  லூக்கா 24 : 49 .  அப்படியே பெந்தெகொஸ்தே நாளுக்கு பின்னரும் சமாரியர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று கொண்ட பின்னரும் பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளவில்லை என்று காண்கிறோம் .  அப் 8 : 12 - 14

 பரிசுத்த  ஆவியை பெற்று கொள்ளும் போது பரிசுத்த ஆவியை பெற்று கொண்டேன் என்பதற்கு அடையாளமாக அந்நிய பாஷை அவனில் கிரியை செய்கிறது .  அந்நிய பாஷை இருவிதமாக கிரியை நடப்பிக்கிறது .

ஓன்று அந்நிய பாஷை வரம் .  மற்றொன்று அந்நிய பாஷை அடையாளம் .  அந்நிய பாஷை வரமாக கொடுக்கப்படா விட்டால் எப்பொழுதும் அந்நிய பாஷையில் பேசுவதில்லை .  ஆவியினால் நிரம்பும் போது மாத்திரமே அந்நிய பாஷை அடையாளம் அவனில் காணப்படும் .  இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .  இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .  இவ்வாறு பரிசுத்த ஆவி பெறும் போது தான் மனித உள்ளத்தில் தேவ அன்பு ஊற்றப்படுகிறது .  ரோம 5 : 5 .  இவ்வித அன்பினால் நிரப்பப்பட்ட விசுவாசி அலது சபையே தேவனுடைய அன்பை நாடுவாராயிருக்கும் . அவ்வித அன்பை நாடுகிற படியினால் மணவாளனை பார்த்து மணவாளி சொல்லுகிற காரியங்கள் .......




.... தொடரும் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக